Breaking News

வவுனியா மாவட்டத்தில் இரு மாதங்களில் 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் மகேந்திரன்


வவுனியா மாவட்டத்தில் டிசம்பர் மற்றும் தற்போது வரை 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம்  பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார்.


வவுனியா பெரியார்குளத்தில் நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பொதுவாகவே டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையை சுகாதார திணைக்களத்தினாலேயே செய்ய வேண்டும் என்று எல்லோரும் எண்ணுகின்ற நிலையில், தற்போது நகரசபை இவ்வாறான நிகழ்வுகளை முன்ணின்று செய்வது வரவேற்கத்தக்க விடயம். டெங்கு என்பது சுகாதார பிரச்சனை மட்டுமல்ல இது ஒரு சமூக பிரச்சனையாகும். ஏன்என்றால் நாங்கள் எங்களுடைய தின்மக்கழிவுகளை அகற்றுவது தொடர்பான சரியான முகாமைத்துவம் இல்லாமை காரணமாக டெங்கு நோயினை பரப்பும் நுளம்புகளின் பெருகுகின்றது.

டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்புகளை நாங்கள் தடுப்பதன் மூலமே டெங்கு நோயை தடுக்க முடியும். மேலும் இதற்குரிய முயற்சியாகவே நகரசபை தலைவரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

வவுனியா மாவட்டத்தை பொறுத்த வரை டெங்கானது கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் எமக்கு அண்மையில் உள்ள யாழ் மாவட்டம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோய்த்தாக்கத்தின் வீரியம் அதிகமாக காணப்படுகின்றது. இவ்விரு மாவட்டங்களிலும் கடந்த வருட ஆரம்பத்தில் டெங்கு நோயாளர்களின் பெருக்கத்தை விட இந்த ஆண்டு ஆரம்பத்தில் மிக அதிகமாக காணப்படுகின்றது.

இதேபோன்று திருகோணமலை மாவட்டத்திலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. அதேபோன்று கொழும்பு, கம்பகா மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

மேற்கூறிய மாவட்டங்களிற்கு வவுனியா மாவட்டத்தில் இருந்து பலர் பல்வேறு தேவைகளிற்காக சென்று வர வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறு போய் வருபவர்கள் மூலமாகவே வவுனியாவில் டெங்கு நோய் தொற்றாளர்களை அடையாளங்கண்டுள்ளோம்.

கடந்த மாதத்தை பொறுத்த வரை வவுனியா மாவட்டத்தில் 09 பேரே டெங்கு நோய் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டனர். 2022 ஜனவரி மாத ஆரம்பம் முதல் தற்போது வரை 11 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளர். மாதம் முடிவில் குறித்த எண்ணிக்கை அதிகரிக்க கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்று தெரிவித்தார்.(Vavuniyan)

No comments