Breaking News

வவுனியாவில் சிறுமிகளை ஏமாற்றிய சஜித்பிரேமதாச


வவுனியாவில் சஜித்பரேமதாஸாவின்  கூட்டத்தில் நடனமாடச்சென்ற இரு சிறுமிகள் ஏமாற்றம்மடைந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது.

வவுனியாவிற்கு இன்று விஜயம்செய்த சஜித் பிரேமதாச பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் பொது மக்களுடனான அரசியல் நிகழ்வொன்று மாலை 3:30 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்தநிகழ்வில் எதிர்கட்சி தலைவர் உரையாற்றி முடிந்ததும் கூட்டம் நிறைவடைந்திருந்தது. இதனையடுத்து வெலிஓயா பகுதியில் இடம்பெறும் மற்றொரு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் சென்றிருந்தார். பொதுமக்களும் கலைந்து சென்றுவிட்டனர். 

குறித்த நிகழ்வில் நடனமாடுவதற்காக இரு சிறுமிகள் தயார்ப்படுத்தப்பட்டிருந்தனர். எனினும் கூட்டம் முடிவடைந்து அனைவரும் சென்றமையால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்த போதும்  அவர்களது நடனநிகழ்வினை  ஒரு சிலருடன் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






No comments