இரு பேருந்துகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்
திக்வெல்ல – பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதனாலேயே குறித்ந விபத்தானது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். (Vavuniyan)
No comments