Breaking News

உயர்தர பரீட்சை முடித்து வீடு திரும்பிய மாணவியை கடத்திய ஆசிரியர்


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடித்தீவு பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு சென்று திரும்பிய 21 வயதுடைய மாணவியை ஆசிரியர் ஒருவரால் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (22) பிற்பகல் 2.45 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்த குழுவினரே மாணவியை கடத்திச் சென்றுள்ளதாக பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட 21 வயதுடைய மாணவிக்கும், மகிழடித்தீவு பாடசாலை ஒன்றில் கற்பித்து வந்த 31 வயதுடைய ஆசிரியருக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் மாணவியின் வீட்டிற்கு ஆசிரியர் சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் மாணவியின் வீட்டார் ஆசிரியரை திருமணம் முடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து சம்பவ தினமான நேற்று மாணவி அரசடித்தீவு பாடசாலையில் உயர் தரப் பரீட்சைக்கு சென்று பரீட்சை எழுதிவிட்டு பாடசாலையில் இருந்து வெளியேறி வீதியில் நடந்து சென்ற போது, முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த ஆசிரியரின் குழுவினர் மாணவியை இழுத்து முச்சக்கரவண்டியில் ஏற்றி கடத்தி சென்றுள்ளதாக பொலிஸாரின், ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (Vavuniyan) 


No comments