Breaking News

இன்று மின்வெட்டில் ஒரு மாற்றம்


இன்றைய தினத்திலும் மின் துண்டிப்பை மேற்கொள்வதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப் பகுதிக்குள் இரண்டு மணி நேர மின் துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு முற்பகல் 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப் பகுதிக்குள் இரண்டு மணி நேர மின்சார துண்டிப்பை மேற்கொள்ளவும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்சார துண்டிப்பை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (Vavuniyan)


No comments