Breaking News

வவுனியாவில் மின்தடை தொடர்பில் வெளியான தகவல்.


உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . 

அதன்படி நாளை (27) ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.

வவுனியா பிரதேசத்தில் சாஸ்திரி கூழாங்குளம், சமயபுரம், சமணங்குளம், நெளுக்குளம் நீர்வழங்கல் சபை, அறுகம்புல் வெளி, பாரதிபுரம், கூமாங்குளம், நகாரிலுப்பைக்குளம், நெளுக்குளம் கலைமகள் பாடசாலையடி, நொச்சிக்குளம், அவுசடப்பிட்டிய, பாண சின்னக்குளம், பொன்னாவரசங்குளம், இராசேந்திரங்குளம், சாம்பல்தோட்டம் வீட்டுத்திட்டம், விநாயகபுரம் வீட்டுத்திட்டம்  ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது .

No comments