Breaking News

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; பலர் படுகாயம்


ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த 11 போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இச்சம்பவத்தில் 04 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரியவருகிறது.

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வைக் கோரியே இன்று அதிகாலை 1.30 மணி முதல், கண்டி - கொழும்பு ரயில் மார்க்கத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஏனையோர் ரம்புக்கனை - கேகாலை, குருநாகல் மற்றும் மாவனெல்ல வீதிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

15 மணி நேரமாக இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றதையடுத்து, ரம்புக்கனை பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர். (Vavuniyan) 

No comments