IMFவுடனான பேச்சுவார்த்தை குறித்து வெளியான புதிய தகவல்
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 18ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கின்றார்.
பிலும்பர்க் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (Vavuniyan)
No comments