Breaking News

ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு கடிதம்



புதிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்பை கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் தம்முடன் இணைந்து பணியாற்றுமாறும் அவர் கடிதத்தின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அமைச்சுப்பதவியை ஏற்கமாட்டோம் என சஜித் பிரேமதாச தெரிவித்திருந்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments