Breaking News

15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை


15 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவு செய்து புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

"Sri Lanka Unique Digital ID" என அழைக்கப்படும் இந்த புதிய அடையாள அட்டையில் கைரேகைகள் மற்றும் இரத்த வகை உள்ளிட்ட நபரின்  தகவல்களுக்கு மேலதிகமாக உயிரியல் தகவல்களும் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்திய கடன் உதவியில் இந்த  புதிய அடையாள அட்டை  வழங்கப்படும் எனவும், ஒன்றரை வருடத்திற்குள் 17 மில்லியன் மக்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். (Vavuniyan) 

No comments