Breaking News

ஒத்திவைக்கப்படுமா உயர்தர பரீட்சை..! பரீட்சை திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை


கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஆனால் உயர்தர பாடத்திட்டம் நிறைவு பெறாத காரணத்தால் உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போடுமாறு மாணவர்கள் வலியுறுத்துவதாகவும் எனவே மாணவர்களின் வலியுறுத்தலுக்கு மதிப்பளித்து உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு அரசாங்கம் பிற்போட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி கட்சியின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை ( 11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்கள் விடுதலை முன்னணியினர் 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முதலாவது தாய் நாடுஇ இரண்டாவது கல்வி என்ற கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள். ஜே.வி.பியின் வலியுறுத்தலினால் நானும் அவர்களின் அரசியல் செயற்பாடுகளில் பகுதியளவில் இணைந்துக் கொண்டேன்.இருப்பினும் கல்வி நடவடிக்கைகளில் விசேட அவதானம் செலுத்தி தேர்ச்சி பெற்றேன்.

கொவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார தாக்கம் ஆகிய காரணிகளால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு தேசிய பரீட்சைகளை நடத்தும் காலம் பிற்போனது.


No comments