Breaking News

காதல் மோகத்தால் பெற்ற தாய்க்கு 17 வயது மகள் செய்த கொடூர செயல்


பேருவளை, கலவில கந்த பகுதியில் தாயை சுத்தியலால் தாக்கிய மகளை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த தாய், மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையால் தாயின் தலையை சுத்தியலால் தாக்கியுள்ளார்.

இதில், 17 வயதான தனது மகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த தாய் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதல் தொடர்பை நிறுத்துமாறு எச்சரித்ததால் தாயை சுத்தியலால் தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான மகளை தமது பொறுப்பில் எடுத்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (Vavuniyan) 

No comments