புதிய அமைச்சரவை இன்று அல்லது நாளை – பதவிகளை ஏற்க மறுக்கும் முன்னாள் அமைச்சர்கள்
புதிய அமைச்சரவைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், புதிய அமைச்சரவை கூட்டத்தை நாளைய தினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், புதிய அமைச்சரவையில் சமல் ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் ஷஷிந்திர ராஜபக்ஸ ஆகியோர் இடம்பிடிக்கமாட்டார்கள் என அறிய முடிகின்றது.
கடந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த முக்கிய அமைச்சர்கள், புதிய அமைச்சரவையில் இடம்பிடிக்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் பதவிகளை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது. (Vavuniyan)
No comments