வவுனியாவில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு
வவுனியாவில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற கடல்களில் பிடிக்கப்படும் கடலுணவுகளே வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டும் நிலையில் தற்போது அதன் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றமே இதற்கு காரணம் என கடலுணவு வியாபாரிகளால் தெரிவிக்கப்படும் நிலையில் ஒரு கிலோ விளமீன் 1000 ரூபாவாகவும் பாறை மீன் 1200 ரூபாவாகவும் முரல் 600 ரூபாவாகவும் சீலா 1000 ரூபாவாகவும் கணவாய் 1200 ரூபாவாகவும் சின்ன இறால் 1200 ரூபாவாகவும் பெரிய இறால் 1800 ரூபாவாகவும் நண்டு 1600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் அதேவேளை கீர்p மீன் 700 ரூபாவாகவும் சால மீன் 300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. (Vavuniyan)
No comments